நவீன தொழில்நுட்பத்துடன் செயற்கைகோள் : சாயர்புரம் ஜி.யு. போப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

satellite-with-modern-technology-sayarpuram-g-u-pope-engineering-college-students-achieve-success

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் விண்கலம் மற்றும் செயற்கைக்கோள்களை புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ஜான் ஆர்.டி. சந்தோஷம் வழிகாட்டுதலின் பேரில்துணை பொறுப்பாளர் டாக்டர். ராமா தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவக்ள் விண்கலம் மற்றும் செயற்கைக்கோள்களை புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

இயந்திரவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் தினேஷ், கோகுல், முத்து செல்வம், ஏஞ்சல், விக்னேஷ், விக்ரம், சரவணகுமார், ஹரி, பிரபாகரன்,பொண்ணு தங்கம் ஆகியோர் சேர்ந்து இந்த சாதனையை படைத்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சுங்கத்துறை உதவி ஆணையர் அழகேசன் மற்றும் பிளாக் ஸ்டோன் ஷிப்பிங் இயக்குனர் அலெக்ஸ் செல்வின் ராஜ்குமார் மாணவர்களை பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் கட்டட பொறியாளர் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி, செல்வரதி, டயலா, ஆனந்தி, டேவிட் ராஜா, இயந்திரவியல் துறை துணை பேராசிரியர்கள் , அலெக்ஸ்ராஜ், கனகராஜ், பிரைட்டன், எபநேசர், எட்வர்ட், மனுவேல் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் செய்திருந்தார்.