தூத்துக்குடி : உச்சநீதிமன்றம் உத்தரவால் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல்

toll-gate-issue-in-thoothukudi

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க மதுரை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், மீண்டும் நேற்றிரவு 12:00 மணி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 135 கிலோமீட்டர் தூரம் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நான்கு வழி சாலை திட்டத்தின் கீழ் இந்த சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு சுங்க சாவடிகள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சுங்கச்சாவடி நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடாமலும் சாலையின் நடுவே சென்ட்ரல் மீடியினில் அரளி செடிகள் நட்டு பராமரிக்காமல் போன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் ஓட்டுவதற்கான வசதிகள் செய்து தரவில்லை எனவே, சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித் மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த 4ம் தேதி சுங்க கட்டணம் வசூல் செய்ய தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி சுங்கசாவடிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது ஆனால் சுங்கச்சாவடி நிறுவனங்கள் தங்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நகல் வரவில்லை என தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த ஐந்தாம் தேதி லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த ஜூன் 5ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சுங்கச்சாவடி நிறுவனம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த இடைக்கால தடைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக சுங்க கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்பட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் வருவதற்கு, முன்பே வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டது . இதைத்தொடர்ந்து மனுதாரர் வழக்கறிஞர் உள்ளிட்டோர் சுங்க கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு கிடைத்தது. தொடர்ந்து நேற்று நள்ளிரவு இரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் மீண்டும் வசூல் செய்யப்பட்டது.

இதையடுத்து, பாலகிருஷ்ணன் சார்பில் தங்கள் கருத்து கேட்காமல் இந்த வழக்கில் எந்தவித உத்தரவும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சுங்கச்சாவடி நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்துவோம் என மனுதாரர் தரப்பினர் தெரிவித்தனர்.