
தூத்துக்குடி அருகே கார் விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட 4பேர் உயிரிழந்தனர். நீதிபதி உட்பட 2பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் ஒரே காரில் திருச்செந்தூர் வந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோடு, எட்டயபுரம் அருகே மேல கரந்தை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபததில் ஸ்ரீதர்குமார், நவீன்குமார், வாசு ராமநாதன், தனஞ்செய ராமசந்திரன் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த் மற்றும் அலுவலக உதவியாளர் உதயசூரியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருப்புகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த்தின் சொந்த ஊர் திருச்செந்தூர் ஆகும். அவர் இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சை சென்ற போது, விபத்தில் காயமடைந்தார்.