நெல்லை ஆட்சியர் உத்தரவின் பேரில் அரசு விடுதி சமையலர்களுக்கு சிறப்பு சமையல் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கிணங்க, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். சசி தீபா, தலைமையில் , திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் உள்ள காப்பாளர்கள் மற்றும் சமையலர்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு துறையிடன அங்கீகரிக்கப் பட்ட முகவர் மூலம், உணவு பாதுகாப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த இந்த முகாமிர் 91 சமையலர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு உணவினை எவ்வாறு பாதுகாப்பாகதயாரிப்பது என்பதை பற்றியும், உணவு தயாரிப்பின் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேலப்பாளையம் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர்ஆர். சங்கரநாராயணன் மற்றும் பயிற்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிர்தௌஸ், சிவசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.