நெல்லை மாவட்டம் மன்னார்புரத்திலிருந்து திசையன்விளை செல்லும் சாலையில் சாத்தான்குளம் ராஜரத்தினம் நினைவு டீச்சர் டிரெயினிங் கல்லூரி முதல்வரான ஜேசு லிவிங்ஸ்டன் என்பவர் தனது நண்பர் கரன் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார்.
வாழைத்தோட்டம் அருகே சென்ற போது, எதிரே வந்த ஜெய்சன் (வயது 20) என்பவர் பைக்குடன் நேருக்கு நேர் மோதியதால், விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஜேசு லிவிங்ஸ்டன் மற்றும் எதிரே பைக்கில் வந்த ஜெய்சன் இருவருமே பலியாகி விட்டனர். படுகாயமடைந்த கரன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியான இருவரின் உடலையும் மீட்டு போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக திசையன்விளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.