நெல்லையில் மூதாட் டியை கட்டிப்போட்டு நகை பறித்த கொள்ளை யர்களை பிடிக்க 3 தனிப் படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீசார் 50-க்கும்மேற் பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு நெல்லை வண்ணார்பேட்டை, அப்பர் சுவாமி தெருவைச் சேர்ந்தவர் வேணு கோபால். இவர் காங்கிரஸ் நிர்வாகியாகஇருந்தவர்.அவ ருடைய மனைவி முத்துலட் சுமி (வயது87) கடந்த 15 ஆம் தேதி இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரிடம் தண்ணீர் கேட்டு உள்ளார்கள். முத்துலட்சுமி தண்ணீர் கொண்டு வருவதற்காக, வீட்டுக்குள் சென்றார். அப்போது, வீட்டுக்குள் சென்ற அந்த நபர்கள் முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த 12 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர கிழக்கு மண் டல போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், உதவி கமிஷனர் சுரேஷ். பாளையங்கோட்டைகுற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பொன் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
கொள்ளையர் களை பிடிக்க இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப் படை போலீசார் வண்ணார் பேட்டையில் சாலை தெரு வில் உள்ள 50-க்கும் மேற் பட்ட ண்காணிப்பு கேம ராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின் றனர்.
ஆய்வில் ரோஸ் கலர் மோட்டார் சைக்கிளில் 2 பேர் முகமூடி அணிந்து வந்ததும், மோட் டார் சைக்கிள் பதிவு எண் இல்லாததும் தெரிய வந்துள் ளது. மேலும் 2 பேரில் ஒருவர் மட்டும் வீட்டுக்குள் சென்று மூதாட்டியை கட்டிப் போட்டு தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். பின்னர், பின்வாசல் வழியாக உள்ளே சென்றவர் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியதும் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் மூலம் விரைவில்மர்ம நபர்களை நெருங்கி விடுவோம் என்று தனிப்ப டையினர் தெரிவித்தனர்.