திசையன்விளை பேரூராட்சியில் குடிநீர் தொட்டி: பேரூராட்சி தலைவி ஜான்சிராணி திறந்து வைத்தார்.

திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் செல்வ மருதூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே ரூ.4.50 லட்சம் மதிப்பில் போர்வெல் போடப்பட்டு சின்டெக்ஸ் தொட்டியுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி திறப்பு விழா பேரூராட்சி தலைவி ஜான்சிராணி தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் செயல் அலுவலர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார் . திறப்பு விழாவில் பேரூராட்சி உறுப்பினர்கள் பிரதீப் குமார், முத்துக்குமார், பிரேம்குமார்,அய்யா குட்டி, பிரதீப் ஸ்வீட்ஸ் அதிபர் முருகானந்தம் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் செந்தில், நடராஜன் ஓய்வு பெற்ற ஆசிரியர் முருகன், ராமர் ஆசாரி,வென்னிமலை, குருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.