நெல்லை மாவட்டம் செட்டிகுளம் -புதுமனை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா முன்னாள் எம்.பி செளந்தரராஜன் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளம் புதுமனையில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 97-வது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் செளந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பின்னர், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பால்முருகன் ,புறநகர் மாவட்ட மகளிரணி துணை தலைவி வசந்தி , பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர் சாரதா ராஜலிங்கம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் முருகன், ஆறுமுகநாடார் ,ராமலிங்கம், சுயம்பு மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள்,ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .