திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத் துப்புதூர் பஜாரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெ. அன்றனி அல்வின் பிரேமா தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
கிளை கழக அவை தலைவர் பிரபாகரன் திமுக கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார் . நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் தங்கபாண்டியன், ஜெயராஜ், லிங்கம் நாடார், தியாகராஜன், கண்ணன் ,செல்வராஜ் ,வெற்றிவேல், செல்வமணி, வைகுண்டம், சொக்கலிங்கபுரம் பத்திரபாண்டி , புலிமான்குளம் கிளைச் செயலாளர் காமில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.