திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் , காரணமாக தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைபடி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் உத்தரவின்பேரில் , களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு மார்ச் 3 ஆம் தேதி முதர் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.