மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு செய்யும் உதவிகள் என்ன? நெல்லை மாவட்டத்தில் விழிப்புணர்வு கலை பயணம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. நிகழ்ச்சியினை நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.

கிராமிய பாடல்கள் மூலம் தமிழக அரசின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு விளக்கிட இந்த கலை நிகழ்ச்சி பயணம் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணார்பேட்டை ஜங்ஷன் , மானூர் அழகிய பாண்டியபுரம் சேரன்மகாதேவி போன்ற இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் இன்று நடைபெறுகிறது.

மாவட்டத்தின் பிற பகுதிகளான ராதாபுரம் , வள்ளியூர் , திசையன்விளை, களக்காடு நாங்குநேரி போன்ற இடங்களில் நாளை கலை நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம் தொடரும் என சிவசங்கரன் தெரிவித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக திருமூர்த்தி செய்து இருந்தார்

கல்வி உதவித்தொகை, உடல் பயிற்சி உபகரண உதவி , தொழில் முனைய மற்றும் கடன் உதவி , இலவச பேருந்து பயண அட்டை , திருமண உதவி மற்றும் மருத்துவ சிகிச்சை உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்