திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக அரசு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. நிகழ்ச்சியினை நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.
கிராமிய பாடல்கள் மூலம் தமிழக அரசின் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு விளக்கிட இந்த கலை நிகழ்ச்சி பயணம் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணார்பேட்டை ஜங்ஷன் , மானூர் அழகிய பாண்டியபுரம் சேரன்மகாதேவி போன்ற இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் இன்று நடைபெறுகிறது.
மாவட்டத்தின் பிற பகுதிகளான ராதாபுரம் , வள்ளியூர் , திசையன்விளை, களக்காடு நாங்குநேரி போன்ற இடங்களில் நாளை கலை நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம் தொடரும் என சிவசங்கரன் தெரிவித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக திருமூர்த்தி செய்து இருந்தார்
கல்வி உதவித்தொகை, உடல் பயிற்சி உபகரண உதவி , தொழில் முனைய மற்றும் கடன் உதவி , இலவச பேருந்து பயண அட்டை , திருமண உதவி மற்றும் மருத்துவ சிகிச்சை உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது