பொதுமக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு : நெல்லை காவல் ஆணையர் உறுதி

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 5ஆம் தேதி ( இன்று ) நடைபெற்ற முகாமில் 14 பேர் கலந்து கொண்டு காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணியிடத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அவர்களிடத்தில் புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்தார். கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள்) V.கீதா( மேற்கு )(கிழக்கு) V.வினோத் சாந்தாராம்(கிழக்கு) ( தலைமையிடம்) திரு.S.விஜயகுமார் ( தலைமையிடம்) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.