திசையன்விளையில் அனைத்து வங்கி அதிகாரிகள்,ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

திசையன்விளை கனரா வங்கி முன் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி வங்கி ஊழியர்கள் , அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி .கே. ரூபர்ட் தலைமை வகித்தார். அதிகாரிகள் மனோஜ் பிரபாகர் மற்றும் இந்தியன் வங்கி அதிர்ஷ்ட குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வங்கிகளில் காலியாக உள்ள பணிஇடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.வெளி ஆட்கள் முறையைக் கைவிட வேண்டும். வாரத்தில் 5நாள் வேல திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வேண்டும். புதிய பணி நியமனம் வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டம் வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை 25லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, வங்கி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கனரா வங்கி ஊழியர் முத்துக்குமார் நன்றி கூறினார்..