நெல்லை : டாக்டர். அகர்வால் மருத்துவமனையில் கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாவது வாரம் உலகம் முழுவதும் கண் மருத்துவ துறையினரால் உலக கண் நீர் அழுத்த நோய்விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடமும் மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு ஏற்படுத்த மனிதசங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ணார்பேட்டை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன், மனிதசங்கிலி நிகழ்ச்சியை திருநெல்வேலி மாநகரம் காவல்துறை துணை ஆணையாளர் (கிழக்கு) வினோத் சந்தரம் தொடங்கி வைத்தார் இந்திய மருத்துவ சங்க திருநெல்வேலி கிளை தலைவர் டாக்டர் முகம்மது அபூபக்கர் செயலாளர் பிரபுராஜ் பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் . லயனல்ராஜ் கண்நீர் அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார். மனித சங்கிலியில் தமிழ்நாடு கால்நடை துறை மருத்துவ கல்லூரி , டாக்டர் . அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி , பாளையங்கோட்டை அன்னை காஜிரா பெண்கள் கல்லூரி, மேலப்பாளையம் நேரு நர்சிங் கல்லூரி , வள்ளியூர், நேசம் சுகாதார அறிவியல் கல்லூரி, திருநெல்வேலி ரோஸ் மேரி பெண்கள் கல்லூரி , ஸ்ரீ சாரதா பெண்கள் கல்லூரி கடயம் ஏ.ஆர் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

உலக கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தேதி வரை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டாக்டர். அகர்வால் மருத்துவமனையில் இலவசமாக கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கான சிறப்புப் பிரிவு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முதல் தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மருத்துவமனை கண்நீர் அழுத்த பிரிவு மருத்துவர் பெட்சி கிளமெண்ட் மருத்துவர்கள், ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்