பாளையங்கோட்டை வட்டாரத்தில் சிவந்திப்பட்டி, தருவை, செங்குளம் மற்றும் நாரணம்மாள்புரம் 2 ஆகிய பகுதிகளில் வேளாண் அடுக்ககம் மூலம் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் பதிவு செய்ய வேளாண்துறை சார்பில் முகாம் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுவரை தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்யாத பாளையங்கோட்டை வட்டார வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளுத்ம இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். இனிவரும் காலங்களில் வேளாண் அடுக்ககம் மூலம் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற வேண்டும். அப்போதுதான், வேளாண்மை துறை மற்றும் பிற துறைகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாநியங்கள் பெற முடியும். குறிப்பாக பி எம் கிஸான் திட்டம் மூலம் ரூ 6000 /-, நில உடமை விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும். பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி(மெசேஜ் வரும் மொபைல் போன் ) மற்றும் தங்களுடைய நிலத்தினுடைய கம்ப்யூட்டர் பட்டா நகல் ஆகியவற்றை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை பாளையங்கோட்டை வேளாண்மை துறை உதவி இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.