நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18-வது ஆண்டு விழா நடைபெற்றது. ரெவரண்ட். மோசஸ் எஸ். மரியதாஸ் ஜெபம் செய்து ஆரம்பித்து வைத்தார். செல்வி அடிக் ஷா செர்லின் நிசி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக லயன். சுயம்பு ராஜன், சத்தியம் டிவியின் நிறுவனர் சுதன், ஊராட்சி மன்ற தலைவர் பொன். மீனாட்சி அரவிந்தன், மாவட்ட பிரதிநிதி கோவிந்த ராஜ், தொடக்க வேளாண்மை சங்க தலைவர் அரவிந்தன், ஊராட்சி துணைத் தலைவர் பலவேசம் என்ற சபாபதி, இராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஆசிரியர் லிவிங்ஸ்டன் மற்றும் கிரிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர் . தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று மாணவர்களிடத்தில் பேசினார்.
மேலும், கல்வியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். பள்ளி முதல்வர் கிறிஸ்டி செல்வராஜ் ஆண்டறிக்கையை வாசித்தார். ஆண்டு விழா ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகி குணசேகரன், தாளாளர் ஜாஸ்மின் அனிதா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர் . முடிவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஆண்ட்ரூஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி , செயின்ட் ஆண்ட்ரூஸ் ப்ளே ஸ்கூல் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.