சிறுபான்மை இன மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் அரசு அதிகாரிகள்- நெல்லையில் சமூக ஆர்வலர் போராட்டம்

betraying-minority-students-social-activists-protest-in-nellai

சிறுபான்மை மாணவர்களின் நலனுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் சிராஜ் மாவட்ட ஆட்சியரிடத்தில் அளித்துள்ள மனுவில், 'இந்திய அளவில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக சிறுபான்மை இன மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளன. இதனை மாணவர்களின் அறியாமை என்று கூறி விட முடியாது. திட்டங்களை சரியான முறையில் சிறுபான்மை மக்களிடம் கொண்டு செல்லாத அரசு துறை அதிகாரிகளே இதற்கு முழு காரணம் . கடந்த 2024 மார்ச் மாதம் முதல் மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கு வரும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மாணசர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படாமல் இருக்கக்கூடிய சிறுபான்மை நலத்துறை அலுவலர்கள் செயல்பட வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மூக ஆர்வலர் சிராஜ் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலக வாசலில் அமர்ந்து அரசுத்துறைகள் தான் உதவி செய்யவில்லை என்று கூறி பொதுமக்களிடம் யாசகம் எடுத்து சிறுபான்மை மாணவர்களுக்கு உதவி செய்ய போவதாக அமர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்து. அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் அவரை சமாதானப்படும்மி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர்.தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 எம்பிக்களின் படங்கள் அச்சிடப்பட்டிருந்த பேனரை கையில் வைத்திருந்தார். அதில், சிறுபான்மை இன மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது குறித்து பாராளுமன்றத்தில் எப்பதான் சார் பேசுவீங்க என்று எழுதப்பட்டிருந்தது.