
நெல்லை டவுண் பகுதியில் குற்றாலம் ரோட்டிலுள்ள ஜாமியா பள்ளிவாசல் அருகே, ஒரு கார் குடிநீர் குழாய் மீது மோதியது. இந்தச் சம்பவத்தில், தண்ணீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. விபத்து நடந்ததும், அருகிலுள்ள பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
நெருக்கமான நகர்ப்புற பகுதிகளில், வாகன ஓட்டியகள் வேகத்தைக் குறைத்து கவனத்துடன் வாகனம் ஓட்ட வேண்டும். மேலும், அதிகாரிகள், இது போன்ற சேதங்களை தடுக்க, முக்கிய குடிநீர் குழாய்களை பாதுகாப்பான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.