நெல்லை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் புகைப்பட கலைஞருக்கு தமிழக அரசின் முதல் பரிசு

tamil-nadu-government-awards-first-prize-to-indian-express-newspaper-photographer

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நெல்லை பதிப்பில் கார்த்திக் என்பவர் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட லவ் டிஎன் என்ற புகைப்பட போட்டியில் இவர் பங்கு பெற்றிருந்தார்.

அந்த போட்டியில் கார்த்திக் எடுத்த புகைப்படத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ள கார்த்திக்கு சக புகைப்பட கலைஞர்கள், செய்தியாளர்கள், உதவி ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 3 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் தமிழ்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. சாமிநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கேரள கழிவுகள் திருநெல்வேலியில் கொண்டு வந்து கொட்டப்பட்டது குறித்து சிறப்பான செய்தி மற்றும் கட்டுரைகளை வெளியிட்டதற்காக திருநெல்வேலி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் தினகரன் ராஜாமணிக்கு சுற்றுப்புற சூழல் காப்பாளர் 2025 விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புகைப்பட கலைஞர் கார்த்திக் மீண்டும் விருது பெற்றது நெல்லை பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.