பணகுடி : மண்ணுளிப் பாம்பு வைத்திருந்தவர் கைது


நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி நெடுஞ்சாலையில் காவல்துறையினர் நேற்று இரவு (மார்ச் 28)ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடைமாக நின்று கொண்டிருந்த . நபரை போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் மண்ணுளிப்பாம்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர் பாலச்சந்திரிகா, வனக்கப்பாளர்கள் .பிரதீபா,வனஜா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் .சரவணன், தனிஸ்,மாசானமுத்து ஆகியோர் சம்பவ இடத்த்துக்கு சென்றனர்.

பின்னர், போலீசாரிடம் பிடிபட்ட சாமியார்மடம் பகுதியில் வசிக்கும் சிவகுமார் (33) என்பவரிடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மண்ணுளி பாம்பை கைப்பற்றி பணகுடி நாகர்கோவில் வன வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்