
திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையே சேர்ந்த முத்துமாரி என்பவர், கால்கள் செயலிழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றார். அரசு வழங்கும் மூன்று சக்கர வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான உதவித் தொகை பெற பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் , பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, தற்கொலை செய்ய தீர்மானித்து (ஏப்ரல் 1)) மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பூச்சிக்கொல்லி மருந்து அருந்தினார்.
உடனடியாக , அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், முத்துமாரியின் நிலை கவலைக்கிடமாக மாறியது. உடனே, ஆட்டோவை வரவழைத்து அதில், அவரை ஏற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அரசு உதவிகளை பெற முடியாமல் அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கான உரிமைகளை பெற்றிட போராட வேண்டிய நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.