நெல்லை: ஷவர்மா உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு

nellai-food-safety-officers-conducts-raids-on-shawarma-shops

உணவு பாதுகாப்புத்துறை ஆனையாளர் உத்திரவின்படியும் மாவட்ட நியமன அலுவலர் ஆலோசனையின் படியும் திருநெல்வேலி மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் அம்பாசமுத்திரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் திருநெல்வேலி டவுண் மற்றும் பேட்டை பகுதிகளிலுள்ள ஷவர்மா விற்பனை செய்யப்படும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் குளிர்சாதனப்பெட்டியில் அதிக நேரம் சிக்கன் வைக்க கூடாது என்றும் அன்றைய தேவைக்கு மட்டுமே சிக்கன் வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எடுத்தவுடன் சிக்கனை வேக வைக்க கூடாது எனவும், அறையின் வெப்பநிலை அடைந்தவுடன் மட்டுமே ஷவர்மா தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆய்வில் கெட்டுப் போன சிக்கன் சுமார் 3 கிலோ சிக்கன், கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.சுகாதார மற்ற கடைகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.