
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட் மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு காலாவதியான மருந்து பெட்டகங்கள் வழங்கப்படுவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.
இதையடுத் இன்று காலை 11மணிக்கு சுகாதாரத்துறை இணை இயக்குநலிடத்தில் நேரில் சந்தித்தும் நாம் தமிழர் கட்சியினர் மனு வழங்க இருந்தனர். அதனைத்தொடர்ந்து இரவோடு இரவாக காவல்துறை அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் சேரிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 9)அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் பர்கிட் மாநகரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிஹயம் செவிலியர்கள் 4 பேர் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதி அளித்தனர். இதையடுத்து, காலாவதியான பொருட்கள் மீண்டும் வந்த செவிலியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.