கிறிஸ்தவர்களின் தவக்காலம்: நெல்லை , தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி

easter-festivel-started-in-nellai

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு தேவாலயங்களில் இன்று (13ம் தேதி) குருத் தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

ஏசுவின் சிலுவைப் பாடுகளையும், உயிர்த்தெலுதலையும் நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக் கின்றனர். லெந்து காலம் என்றழைக்கப்படும் இந் நாட்களில் விருந்தோம்பலை தவிர்த்து விடுவர். இந்தாண்டுக்கான தவக்காலம் கடந்த மார்ச் 5ம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தவக் காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடை பிடிக்கப்படுகிறது.

இதன் துவக்க நாளான, இன்று ( ஏப்ரல் 13ம் ) குருத் தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து ஜெருசேலம் நகரில் பவனியாக சென்றதை குறிக்கும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஆலயங்களிலும் குருத் தோலை பவனி நடக்கிறது.

பாளையங்கோட்டை சவேரியார் ஆலயத்தில் காலை 7 மணிக்கு மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி, சிஎஸ்ஐ பேராயர் பர்னபாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறும் பவனியில் ராபர்ட் புரூஸ் எம்பி மற்றும் குருவானவர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ், மறைமாவட்ட செயலக முதல்வர் ஞானப்பிரகாசம் , ஆயரின் செயலாளர் மிக்கேல்ராஜ், சவேரியார் ஆலய பங்குத்தந்தை சந்தியாகு, உதவி பங்குத்தந்தை கள் ஜான்சன், சந்தியாகு மற்றும் இருபால் துறவற சபைகளைச் சேர்ந்த குருக்கள், கன்னியர்கள், சக தர, சகோதரிகள், சவேரியார் பேராலய அனைத்து அன்பிய மண்டலங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சேவியர் அமல் ராஜ், சிஎஸ்ஐ பேராயரின் துணைவியார் ஜாய் பர்னபாஸ், உதவி குரு வேதபிரபா பொன்ராஜ். மிலிட்டரி லைன் சேகர தலைவர் மருதம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குருத்தோலை பவனி சவேரியார் ஆலயத்தில் இருந்து மிலிட்டரி லைன் கிறிஸ்துவ ஆலயத்தில் அடைகிறது. அங்கு ஓசன்னா கீதம் பாடப்பட்டது. அருட்திரு ஜெனிபா ராணி வேதப் பாடம் வாசிக்க, பேராயர் பர்னபாஸ் செய்தி வழங் குகிறார்.

இதேபோல் நெல்லை. தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆலயங்களி லும் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. வரும் 17ம்தேதி பெரிய வியாழன் திருச்சடங்குகள் மற்றும் ஆராதனை, 18ம் தேதி புனித வெள்ளி பிரார்த்தனையும், 20ம் தேதி உயிர்ப்புபெருவிழா எனப்படும் ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.