
இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
லெந்து காலத்தில் இன்று ( ஏப்ரல் 13) குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நெல்லை திருமண்டல வருசபத்து சபையில் சேகர குருவானவர் டி.ஆர். சுவமிதாஸ் தலைமையில் வருசபத்து சபை ஊழியர் குமார் முன்னிலையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைப்பெற்றது.
ஆலயத்தில் இருந்து பவனி தொடங்கி கோட்டூர் பகுதி முழுவதும் பவனியாக சென்றனர். இதில் ஏராளமான சபை மக்கள் பங்கேற்றனர். டேனியல், பெவின், ராஜையா சாமுவேல், செல்வின் ஆகியோர் இணைந்து ஆலய முழுவதும் குருத்தோலைகளால் அலங்காரம் செய்திருந்தனர்.