ராதாபுரத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்

admk-neer-mor-panthal-inaugurated-by-former-mp-soundararajan

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் அமைப்புகள் பொது மக்கள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் திருநெல்வேலி புறநகர் மாவட்டம் ராதாபுரம்சட்டமன்ற தொகுதி, ராதாபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராதாபுரம் பேருந்து நிலையம் அருகில் வெயிலின் தாக்கத்தை தீர்க்க நீர்,மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளருமான சௌந்தர்ராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ராதாபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் . அந்தோணி அமலராஜா இந்த ஏற்பாட்டினை செய்திருந்தனர். இந்நிகழ்வில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாராயண பெருமாள் , மாவட்ட கழக இணைச் செயலாளர் .ஜான்சிராணி, பணகுடி பேரூராட்சி கழக செயலாளர் . லாரன்ஸ் மற்றும் கழக நிர்வாகிகள் துரைசாமி, சமுகை சந்திரன், வடுகன்பட்டி குமார், மின்னல், செந்தில் முருகன், குமரேசன், சுப்ரமணியன், வினேஷ்ராஜா, பாலரிச்சர்ட், சரவணன், நாராயணன், கிளை கழக செயலாளர்கள் ஐயப்பன், கணேசன், செல்லப்பா, மூர்த்தி, சுப்பிரமணியன், ராமர்நாடார், இசக்கியப்பன், ஜெயராஜ், ஸ்டிபன், சந்திரன், சுந்தர், ராஜ்குமார், ரவிச்சந்திரன், இசக்கியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.