
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியை சேர்ந்தவர் ஆல்பர்ட் (41). இவர் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே நேதாஜி சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று (ஏப்18) காலை கடையை திறப்பதற்காக ஊழியர்கள் சென்றபோது அந்த கடையின் ஷட்டர் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் ஊழியர்கள் உரிமையாளரான ஆல்பர்ட்டுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் ஷட்டர் கதவை ஆயுதங்களால் உடைத்து கடையில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைன மேலப்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 4 சிறுவர்கள் ஷட்டர் கதவை உடைத்ததும், கடைக்குள் ஷட்டர் கதவை ஒட்டிய நிலையில் ரக் இருந்ததால், உள்ளே செல்ல முடியாமல் திணறியதும் தெரியவந்தது. மேலும் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அந்த சிறுவர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் மேலப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
---