
திசையன்விளை அருகே உள்ள பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரி சார்பில் உவரி கடற்கரை மற்றும் கிராமத்தில் தூய்மை திட்ட முகாம் நடந்தது. கல்லூரி சேர்மன் வி .எஸ். கணேசன் மற்றும் செயலாளர் எஸ் .ஜி .ராஜேஷ் வழிகாட்டுதலின்படி மாணவர்களால் முகாம் நடத்தப்பட்டது. முகாமை உவரி பங்குத்தந்தை ராஜன் துவக்கி வைத்து தூய்மை திட்ட முகாம் அவசியம் குறித்து உரையாற்றினார். முகாமில் 120 ஜிபி ரேட்டிங் மாணவர்கள் 10 பி எஸ் சி மாணவர்கள், வணிக கப்பல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். காலை முதல் மதியம் வரை நடந்த முகாமில் மாணவர்கள் கடற்கரை மற்றும் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை இவைகளை தனித்தனியாக பிரித்து சேகரித்து சுத்தம் செய்தனர் . மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.ஊர் மக்கள் மற்றும் மீனவர்களிடம் கிராமம் மற்றும் கடற்கரை சுத்தமாக பராமரிக்க வேண்டுமென மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கேப்டன் ஜாகிர் உசேன், நிர்வாக பிரதிநிதி அன்றோ எபிபெனி ,கேரியர் டெவலப்மெண்ட் கவுன்சிலர் ஸ்டெயின்ஸ் ஜபர்சன், விடுதி காப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.