மகள் கொலையில் புகார் அளித்த தந்தை, தாய் பல்டி அடித்ததால், கணவர், மாமியார் விடுவிப்பு

husband-mother-in-law-acquitted-after-father-and-mother-refused-to-report-daughter-s-murder

நடத்தையில் சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்த கணவர் மற்றும் அவரது தாயார் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உபகாரமாதாபுரத்தை சேர்ந்தவர் ஜான்பால் (42. )இவருக்கும் பொன் இசக்கி என்பவருக்கும் 2009ல் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொன் இசக்கிக்கும் இன்னொரு நபருக்கும் கள்ள தொடர்பு இருந்ததால் ஆத்திரமுற்ற கணவர் ஜான்பால் 2017 மே14 ல், மனைவியை வெட்டிக் கொலை செய்தார்.

பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் ஜான் பால், அவரது தாயார் அந்தோணியம்மாள் மற்றும் உதவிய நண்பர் மகாராஜன் ஆகியோரை கைது செய்தனர். திருநெல்வேலி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கில் முக்கிய சாட்சியான இறந்த இளம் பெண் பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி | தாயார் இசக்கியம்மாள் உள்ளிட்டவர்கள் சம்பவத்தின் போது புகார் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கொலையாளி குறித்து தெரியாது என பெரும் பிறழ்சாட்சியாக மாறினர். இதனால் கைதான ஜான் பால் அவரது தாயார் மற்றும் நண்பரை நீதிபதி பத்மநாபன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.