
பாளையங்கோட்டை மூளி குளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ரேஷ்மா . திருநங்கையான தனது வீட்டில் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில், அங்கிருந்த கிரில் கம்பி அவரது உடலில் பலமாக குத்தியது. . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 மருத்துவ ஊர்தி ஊழியர்கள், ரேஷ்மாவின் உடலில் இருந்து கம்பியை அகற்ற முயற்சித்தனர். ஆனால், கம்பி ஆழமாக ஊடுருவியிருந்ததால் அவர்களால் முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிரில் கம்பியை வெட்டி ரேஷ்மாவை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் ரேஷ்மா தனது இடது கையை இழந்துள்ளார். மேலும், அவரது உடலில் பாய்ந்த இரும்பு கம்பி, தோள் பட்டையை குத்தி கிழித்துள்ளது. கம்பியுடன் அப்படியே ரேஷ்மாவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.