
விக்கிரமசிங்கபுரம் அருகே தங்கை தற்கொலை செய்த துக்கத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மில் கேட் அடிவாரத்தைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகள் பத்மாராணி (36). இவருக்கும் வேம்பை
யாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பத்மாராணியின் அண்ணன் துரை. இவர்விக்கிரமசிங்கபுரம் மில்கேட் அடிவார பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த 14ம் தேதி வயிற்று வலி காரணமாக பத்மா ராணி வீட் டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 15 ம் தேதி தங்கையின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் துக்கத்தில் இருந்த துரை (52) மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வந்து படுத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தி னம் இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.