விக்கிரமசிங்கபுரம் : தங்கை இறந்த துக்கம் தாங்காமல் அண்ணனும் விஷம் குடித்து தற்கொலை

Unable-to-bear-the-grief-of-his-sister-s-death-his-brother-also-committed-suicide-by-consuming-poison-Vickramasingapuram

விக்கிரமசிங்கபுரம் அருகே தங்கை தற்கொலை செய்த துக்கத்தில் அண்ணனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மில் கேட் அடிவாரத்தைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகள் பத்மாராணி (36). இவருக்கும் வேம்பை
யாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பத்மாராணியின் அண்ணன் துரை. இவர்விக்கிரமசிங்கபுரம் மில்கேட் அடிவார பகுதியில் வசித்து வந்தார்.

கடந்த 14ம் தேதி வயிற்று வலி காரணமாக பத்மா ராணி வீட் டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 15 ம் தேதி தங்கையின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் துக்கத்தில் இருந்த துரை (52) மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வந்து படுத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தி னம் இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்