கோதையார் மின் நிலையம் அருகே 7 யானைகள் அடங்கிய கூட்டம்

A-herd-of-7-elephants-near-Kodaiyar-Power-Station

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோதையார் மின் நிலையத்தின் அருதகே நேற்று மாலை மணியளவில் ஏழு யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டது.

மாஞ்சோலை, நாலுமுத்து, காக்காச்சி போன்ற பகுதிகளுக்கு மேலே அமைந்துள்ள கோதை ஆறு மின்வாரிய அணைப்பகுதியில் இருந்து நீர் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நீர் மின் நிலையத்தின் பின்புறம் தாய் யானை மற்றும் குட்டிகள் உட்பட மொத்தம் ஏழு யானைகள் அமைதியாக மேய்ந்து கொண்டும், நீர் அருந்திக் கொண்டும் இருந்தன.வனப்பகுதிக்குள் யானைகள் கூட்டமாக இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும், மின் நிலையத்தின் பின்புறம் இவ்வளவு பெரிய யானைகள் கூட்டம் ஒரே நேரத்தில் காணப்படுவது அப்பகுதி மக்களுக்கும், வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வனப்பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் யானைகள் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் அணைகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. கோதையார் மின் நிலையப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி இருக்கும்.

இந்த யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக இங்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், இப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் யானைகளுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோதையார் மின் நிலையப் பகுதியில் யானைகள் கூட்டமாக காணப்பட்ட இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்