ஏர்வாடி அருகே சொந்த வீட்டில் அக்காவின் 29 பவுன் நகைகளை திருடிய வாலிபர்: தாயார் தற்கொலை

youth-steals-29-pounds-of-jewelry-from-sister-s-home-near-ervadi

ஏர்வாடி அருகே சொந்த வீட்டில் 29% பவுன் நகைகளை திருடிய வாலிபர், தாயாரின் இறு திச்சடங்குக்கும் வராமல் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்ற னர்.


நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளன. ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வெண்ணிலா நகைகளை தன்னுடைய தாயாரான மாவடியில் வசிக்கும் தன் தயானா ருக்குமணியிடம் (57) கொடுத்து வைத்திருந்தார். ருக்குமணி அந்த நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார்.

கடந்த 18-ந்தேதி மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த வெண்ணிலா தாயாரிடம் சென்று நகைகளை தரும்படி கேட்டுள்ளார். ருக்குமணி பீரோவை திறந்து பார்த்தபோது, 29 1/2 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும்.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த மகளின் நகைகள் திருடு போனதால் அதிர்ச்சியடைந்த ருக்குமணி மன வேதனை அடைந்தார். இதனால், கடந்த 19-ந்தேதி வீட்டின் பின்புறம் உள்ள பூவரசு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது இறுதிச்சடங்கில் 2-வது மகன் வெங்க டேஷ் (28) கலந்து கொள்ளவில்லை. இவர் திருச் சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.


இதற்கிடையே ருக்குமணியின் கணவர் காசிலிங்கம் தனது மகன் வெங்கடேஷ் கடந்த 13-ந் தேதி வீட்டிற்கு வந்து விட்டு, மறுநாள் சென்றதாகவும், தாயாரின் இறுதிச்சடங்குக்கு கூட வரவில்லை என்று போலீசாரிடத்தில் கூறினார். எனவே, அவர்தான் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய் துள்ளார்.

தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சுதா, சப்-இன்ஸ் பெக்டர் முருகன் ஆகியோர் வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.