
தமிழக அரசு பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம், நெல்லை மாவட்டம் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மாதாந்திர இலக்கிய நூல் அறிமுக கூட்டம் உலகப் புத்தக தின விழாவாக நடைபெற்றது.வாசகர் வட்ட தலைவர் அ. மரியசூசை தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை வாசர் வட்ட துணைத்தலைவர் முனைவர் கவிஞர் கோ .கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். நல்நூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன் சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணை செயலாளர் கவிஞர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில், மறைந்த எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், மறைந்த போப் பிரான்சிஸ், காஷ்மீர் பகல்ஹாமில் மரணமடைந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக வட்டார கல்வி அலுவலர் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். டிவிஎஸ் நகரைச் சார்ந்த செல்வன் பு. குமார கபிலன் ரூ.1000 செலுத்தி நூலகப் புரவலரானார். நெல்லை மாவட்ட ஆசிரியர்களின் சிறுகதை தொகுப்பான 'உங்களுடன் ஐந்து நிமிடம்' என்ற நூலை நாங்குநேரி அரசு பள்ளி ஆசிரியை ஜெபசிந்தி அறிமுகம் செய்து பேசினார்.
நெல்லை மாவட்ட மாணவர்களின் சிறுகதை தொகுப்பான 'கதை சொல்லப் போறோம் ' என்ற நூலை செட்டிகுளம் அரசு பள்ளி ஆசிரியை லட்சுமி அறிமுகம் செய்து பேசினார். விழாவில் சாகித்திய அகடமி விருது பெற்ற தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை முனைவர் விமலா, தமிழ்நாடு அரசு தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாடு அரசு தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் பாப்பாக்குடி முருகன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
உலகப் புத்தக தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நாங்குநேரி அரசு மேல்நிலை பள்ளிக்கு நூலகத்துக்கு நூல்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூலகர்கள் மகாலெட்சுமி,ராஜேஸ்வரி,கண்ணுப்பிள்ளை மற்றும் கவிஞர்கள் கோதைமாறன், சக்தி வேலாயுதம்,சுப்பையா நூலகர் அகிலன் முத்துக்குமார்,சரவணக்குமார்,நல்லாசிரியர் ராஜேந்திரன்,தளவாய், மாணிக்கவாசகம், தியாகராஜன்,மணிமாலா,கோபாலகிருஷ்ணன், அம்பேத்கர், தலைமையாசிரியர் கண்ணன்,ஜெயந்திமாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் ச. சீனிவாசன் நன்றி கூறினார்.