
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டைவிளைப்பட்டி ரோடு,வடக்கு அகஸ்தியர் புரத்தை சேர்ந்தவர் அருள் மூர்த்தி .இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அருள்மூர்த்தியின் தங்கை மகளின் பூப்புனித நீராடு விட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக அருள்மூர்த்தி சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்தார்.இந்நிலையில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக நேற்றிரவு புதிய துணிகளை வாங்கிங்கொண்டு அவரது மனைவி ராஜேஸ்வரியுடன் டாணா பகுதியில் இருந்து வடக்கு அகஸ்தியர் புரத்திற்கு இருசக்கரத்தில் சென்று கொண்டிருந்தார் பத்திர பதிவு அலுவலகம் அருகில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென சாலை ஓரத்தில் இருந்து காட்டு மிளா ஒன்று இருசக்கர வாகனத்தின் குறுக்கே வந்து விழுந்தது. இதில் , மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் அருள் மூர்த்தி, ராஜேஷ்வரி படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக்கு குறித்து பொதுமக்கள் கூறுகையில் , 'சர்வ சாதாரணமாக வன உயிரினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. கடைகளுக்கு சென்று வர கூட பயமாக இருக்கிறது, வனத்துறை ச கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் அது மட்டுமல்லாமல் அடிவார பகுதிகளில் சோலார் மின்வேலி அமைத்து வனவிலங்குகள் ஊருக்கு வராதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் ' என்று தெரிவித்துள்ளனர்.