தென்காசி: உயிரிழந்த காவலருக்கு காவல் நண்பர்கள் குழு சார்பில் 25 லட்சம் நிதி உதவி

tenkasi-police-friends-group-provides-financial-assistance-of-rs-25-lakhs-to-deceased-police-officer

தென்காசி மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர் செய்யது அலி. இவர் கடந்த ஜனவரி 14ம்தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரின் குடும்பத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் 2009 ஆம் ஆண்டு பேட்ச் காவலர்களின் உதவும் அன்பு உள்ளங்கள் காவலர் நண்பர்கள் குழு சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி திரட்டப்பட்டது . இதையடுத்து,மறைந்த காவலர் செய்யது அலியின் குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது . நிகழ்ச்சியின் போது செய்யது அலியின் குடும்பத்தினரிடம் 25 லட்சம் நிதி உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.