
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அண்டை மாநிலங்களில் இருந்தும தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவ கழிவுகளை பல்வேறு ஊர்களில் பொது இடங்களில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ் நாட்டில் எந்த ஒரு இடத்திலும் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டணை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில்நிறைவேற்றி உள்ளது . இது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு செயல் வடிவம் கொடுத்து நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.