
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகி வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும், ஆயிரக்கணக்கான வெளிப்புற நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்
இதில் அவசர சிகிச்சை பகுதி மற்றும் அதிதீவிர சிகிச்சை, விபத்து கால சிகிச்சை, இதயவியல் மூளை நரம்பியல் உட்பட பல்வேறு நோய்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.நெல்லை அரசு மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் சிடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பல வார்டுகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நோயாளிகளுடன் உதவிக்காக தங்கியிருக்கும் உறவினர்கள் பலர் இரவு நேரங்களில் அந்தந்த வார்டுகளுக்கு வெளியே படுத்து உறங்குகின்றனர். இரவு நேரங்களில் நாய்களின் தொல்லை அதிக அளவில் வார்டுகளில் காணப்படுவதால் நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினர்கள் அச்சத்திலேயே உள்ளன. மேலும் வார்டு வளாகத்தில் சுற்றக்கூடிய நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதால் எந்நேரத்திலும் அவர்களை கடிக்கும் சூழல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.