
தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் திருநெல்வேலி மாவட்டம் ஒட்டுமொத்தமாக 95.53% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 16-வது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், அரசுப் பள்ளிகள் அல்லாத பிற பள்ளிகளின் (தனியார் மற்றும் பிற) தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு 95.63% மாணவிகள் மற்றும் 87.37% மாணவர்கள் என ஒட்டு மொத்தமாக 92.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுபுறம், அரசுப் பள்ளிகள் அல்லாத பிற பள்ளிகளின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. இப்பள்ளிகளில் 94.45% மாணவர்களும், 97.76% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு பாலினரும் படிக்கும் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.93% ஆக உள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 64 தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும். தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாநில அளவில் அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி 5-வது இடத்தையும், தூத்துக்குடி 9-வது இடத்தையும், தென்காசி 22-வது இடத்தையும் பெற்றுள்ளன.