திருநெல்வேலி ஜெயேந்திர பள்ளி மாணவி 597 மதிப்பெண் எடுத்து சாதனை

tirunelveli-jayendra-school-student-scores-597-marks

தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ மாணவிகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, விஜயா ஸ்ரீ என்ற மாணவி 597 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆங்கிலப் பாடத்தில் அவர் நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். மேலும், வெங்கட் பிரசன்னா என்ற மாணவர் 595 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மீனாட்சி என்ற மாணவி 593 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அரசுப் பள்ளிகளை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநில அளவில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது பெருமைக்குரியது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாகி ஜெயேந்திரா மணி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கி மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவி விஜயா ஸ்ரீ கூறுகையில், " ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்பும், ஒரு வருடம் முழுவதும் மேற்கொண்ட விடாமுயற்சியுமே இவ்வளச மதிப்பெண்கள் பெற காரணம். ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்தியதால், பொதுத்தேர்வுகளை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள முடிந்தது. கடவுளின் ஆசியும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும், ஆசிரியர்களின் முழு உதவியும் எங்களது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இதன் காரணமாகவே இன்று பள்ளி அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று எங்கள் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் பெருமை சேர்க்க முடிந்தது," என்று தெரிவித்தார்.

ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இந்த அபார வெற்றி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், மாணவர்களின் கடின உழைப்பையும் எடுத்துக்காட்டுகிறது. மாணவி விஜயா ஸ்ரீயின் தனித்துவமான சாதனை திருநெல்வேலி கல்வி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.