வள்ளியூர் : தாய் இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்:375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி

Valliyur-Student-writes-12th-standard-exam-despite-grief-over-mother-s-death

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சுபலட்சுமி. இவர்களுக்கு சுனில்குமார் 17, என்ற பிளஸ் 2 பயிலும் மகனும், யுவாசினி 14, என்ற 9ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். ஆறாண்டுகளுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டார். சுபலட்சுமி குழந்தைகளை வளர்த்து வந்தார். சமீப காலமாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாதிப்பு அதிகரித்த நிலையில் 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 3ம் தேதி உடல்நிலை மோசமடைந்து இறந்தார். மகன் சுனில்குமார் வள்ளியூர் கன்கார்டியா பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியதால் தாய் இறந்த சோகத்திலும் தேர்வுக்கு சென்றார். சுனில் குமார் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

மேலும் படிக்க
Tirunelveli-Action-will-be-taken-against-companies-that-do-not-pay-minimum-salary
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது  நடவடிக்கை பாயும்!- நெல்லை உதவி ஆணையர் எச்சரிக்கை!
Nellai-MP-Robert-Bruce-warns-the-Railway-Department-tirunelveli
திருநெல்வேலி: மறியல் போராட்டம் நடத்த தூண்டாதீங்க!- ரயில்வே துறைக்கு நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!
5-died-in-a-quarry-accident-Radhapuram-National-Disaster-Response-Force-rushed-to-Sivaganga
திருநெல்வேலி: கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி... சிவகங்கை விரைந்தது ராதாபுரம் தேசிய பேரிடர் மீட்புப் படை
Consider-higher-education-and-choose-wisely-Tirunelveli-District-Collector-Sukumar-advises-students
திருநெல்வேலி: உயர்கல்வியை ஆலோசித்து தேர்வு செய்யுங்கள்!- மாணாக்கர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுரை
Pay-Rs-26-thousand-as-minimum-wage-Trade-unions-protest-in-Nellai
திருநெல்வேலி: குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவும்!- நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்