
நெல்லை மாவட்டம் இடையன் குடி பேராயர் கால்டுவெல் நினைவு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடந்தது.இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அணிகள் மோதின.இதில் திசையன்விளை இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசும் இடையன் குடி கால்டுவெல் நினைவு கழகம் அணி இரண்டாம் பரிசும் சிவசுப்பிரமணியபுரம் அணி மூன்றாம் பரிசும் பண்ணையூர்செட்டிகுளம் அணி நான்காம் பரிசுபெற்றன.முதல் பரிசு பெற்ற திசையன்விளை அணிக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முதல் பரிசு தொகை 20 ஆயிரம் வழங்கி பாராட்டினார். இரண்டாம் பரிசான 11 ஆயிரத்தை குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்க, மூன்றாம் பரிசு 10 ஆயிரத்தை முதுமொத்தன்மொழி ராம் கிஷோர் பாண்டியன் வழங்கினார். நான்காம் பரிசான 7 ஆயிரத்தை திசையன்விளை ஆன்ட்ரூ ஜெய்சன் அளித்தார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வழங்கினர். பரிசு வழங்கும் விழாவில் தொழிலதிபர் தங்கையா கணேசன், இடையன்குடிபஞ்சாயத்து தலைவர்ஜேகர்,ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி,உறுமன் குளம் பொன் இசக்கி பாண்டியன், நெல்சன் ராஜா,உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராயர் கால்டுவெல் நினைவு கழக நிர்வாகிகள் சி.ஜேகர், ஜெயக்குமார், ஹெர்பர்ட்,சுகிர்தராஜ், ராஜேந்திரன்,அனனியா பவுல்,குணசிங், ஆல்பர்ட் ,பாபு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எம்.லிவிங்ஸ்டன் ஆகியோர் செய்திருந்தனர்.