
திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவிகளை திருநெல்வேலி மேயர் கோ.ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலி மாநகராட்சி டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாணவிகள் சிவரஞ்சனி-583 மதிப்பெண்களும் ஆசிபா 581 மதிப்பெண்களும் சந்தியா 575 பிரியதர்ஷினி 574 மதிப்பெண்களும் பெற்றனர். இதையடுத்து, பள்ளியில் மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநெல்வேலி மேயர் ராமகிருஷ்ணன் மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜ் மாமன்ற உறுப்பினர்கள் அனார்கலி சுபகாணி , மன்சூர் தலைமை ஆசிரியர் கணியம்மாள் துடிண தலைமை ஆசிரியர் தராகணி நெல்லை பகுதி கழக துணை செயலாளர் அப்துல் சுபஹானி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.