
நெல்லை ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏராளமான ரயில்கள் இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. தற்போது, கோடை காலம் தொடங்கியிருப்பதால், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதலாக 3 தணணீர் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தன் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது , ஒரு சில வினாடிகள் யோசித்தேன்
திருநெல்வேலி சந்திப்பில் வெப்பத்தை சமாளிப்பது எப்படி என்று. இதனால், இந்த கோடையில் பயணிகளுக்கு மூன்று தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் உயிர்காக்கும். நீர்ச்சத்துடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்! என்று கூறியுள்ளார்.