திசையன்விளை : 12ம் வகுப்பு தேர்வில் ஜெயராஜேஷ் பள்ளி மாணவர்கள் படைத்த சாதனைகள்

achievements-of-12th-grade-students-of-jayarajesh-school-thisayanvilai

தமிழகத்தில் இரு நாட்களுக்கு முன்பு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது- இதில், நெல்லை மாவட்ட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். தமிழக அளவில் தனியார் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் நெல்லை மாவட்டம் இரண்டாவது இடம் பிடித்தது.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையிலுள்ள ஜெயராஜேஷ் பள்ளி மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வில் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்த பள்ளியில் ஹென்சி ஹெப்சிபா 12ம் வகுப்பு தேர்வில் 581 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.

நந்தினி என்ற மாணவி 574 மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடம் பெற்றுள்ளார். சுவர்ணா பிரீத்தா என்ற மாணவியும் 574 மதிப்பெண்களை எடுத்துள்ளார். அதோடு , இந்த பள்ளியை சேர்ந்த மாணவி மோனிகா ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்களும் மாணவன் யுகேஷ் ஹரி கணிதத்தில் 100 மதிப்பெண்களும் கார்த்திகா வணிகவியலில் 100 மதிப்பெண்களும் கோபிகா சுனிதா கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.