வள்ளியூரில் நரிக்குறவர்களுக்கு டீ கொடுக்க மறுத்த மாஸ்டர்... பின்னணி என்ன?

the-master-who-refused-to-give-tea-to-foxes-in-valliyur

வள்ளியூரில நரிகுறவ மக்களுக்கு டீ கொடுக்க மறுத்த டீ மாஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல பேக்கரியில் டீ குடிப்பதற்காக நரிகுறவ சமுதாயத்தைச் சேர்ந்த சரத் என்பவர் சென்றுள்ளா. இவர், டீக்காக பணத்தை கொடுத்து டீ டோக்கன் வாங்கி, டீ மாஸ்டரிடம் கொடுத்துள்ளார். அப்போது , டீ மாஸ்டர் டோக்கனை வாங்கி வைத்து விட்டு 'உங்களுக்கெல்லாம் டீ கிடையாது, உங்களுக்கு டீ கொடுக்கக் கூடாது' என எங்கள் கடை ஓனர் கூறியிருக்கிறார். அதனால் உங்களுடைய டீக்கான பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என மரியாதை குறைவாக திட்டியுள்ளார்.

இதனால். நரிகுறவர்கள் டீ மாஸ்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வேதனையடைந்த நரிகுறவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளிப்பதாக கூறினர். கடையின் ஊழியர்களிடம் இது குறித்து கேட்ட போது, நரிகுறவ மக்கள் டீயை வாங்கி வைத்துக் கொண்டு கடையின் முன்பு ஒருவரையொருவர் தாக்கி அசிங்கமான வார்த்தைகளால் சண்டையிட்டு கொள்கின்றனர். இதனால், கடைக்கு வாடிக்கையாளர்கள் வர தயங்குகின்றனர். அதனால் , டீ கொடுக்கக் கூடாது என ஓனர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.