
நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர் ஒருவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது, ' நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகள் அதிமுக கோட்டையாக இருந்தது. கடந்த 2001 முதல் இந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அதிமுக தொண்டர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதிமுக தொண்டர்களின் உதவியால் வெற்றி பெற்றவர்கள் தங்களின் சுயநலத்துக்காகவும் சாதியை சேர்ந்தவர்களுக்காகவும் மைத்துனர்களுக்காகவும் மட்டுமே உழைக்கின்றனர். தொண்டர்கள் தெருவில் நிற்கின்றனர். நெல்லையில் அதிமுக அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2026ம் ஆண்டு தேர்தலில் கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் உழைக்கும் உண்மை விசுவாசியை தேர்வு செய்து நெல்லை, பாளையங்கோட்டையில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நெல்லையில் அதிமுக இல்லை ' என்று கூறப்பட்டுள்ளது.