அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு: திருநெல்வேலியில் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு

enthusiastic-welcome-to-annamalai-bjp-workers-cheer-in-tirunelveli

கன்னியாகுமரியில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். பின்னர், அங்கிருந்து இன்று (மே 10 ) காலை திருநெல்வேலி மாவட்ட எல்லையான கேடிசி நகர் பகுதிக்கு வந்தார். அவருக்கு பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தின் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் நாகராஜன், பாஜகவின் முன்னணி வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திரளான பாஜக தொண்டர்கள் கேடிசி நகர் பகுதியில் குவிந்து, "பாரத் மாதா கி ஜெய்" என்ற கோஷங்களை எழுப்பி அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணாமலை வருகையையொட்டி, கேடிசி நகர் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏராளமான தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். அண்ணாமலை, தொண்டர்களின் அன்பான வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்றார். வழியெங்கும் பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அவருக்கு கிடைத்தது.