திருநெல்வேலி ரயில்வே போலீஸ் அதிரடி: பெங்களூருவில் இருந்து கடத்தப்பட் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

Alcohol-and-tobacco-products-smuggled-from-Bengaluru-seized-tirunelveli-railway-plice

திருநெல்வேலி ரயில்வே போலீசார் இன்று ( மே 10)அதிரடியாக நடத்திய சோதனையில், பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட பெரிய அளவிலான மது மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி ரயில்வே காவல் நிலைய போலீசார் இன்று அதிகாலை மேற்கொண்ட சோனையின் போது, சந்தேகத்திற்கிடமான பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்தனர். அப்போது, மூன்று பேர் சட்டவிரோதமாக மது மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரைச் சேர்ந்த பி.செல்வராஜ் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 180 மில்லி லிட்டர் கொண்ட 10 பாக்கெட் பிராந்தி, 180 மில்லி லிட்டர் கொண்ட 10 பாக்கெட் விஸ்கி, 180 மில்லி லிட்டர் கொண்ட 5 பாக்கெட் ரம் மற்றும் 90 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாக்கெட் ரம் என மொத்தம் 26 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த எஸ்.சச்சின் (வயது 38) என்பவரிடமிருந்து 750 மில்லி லிட்டர் கொண்ட 9 பாட்டில் ரம் மற்றும் 750 மில்லி லிட்டர் கொண்ட ஒரு பாட்டில் விஸ்கி என 10 பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.

அதோடு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜே.முத்துராமன் (வயது 34) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து "கணேஷ் 701" என்ற புகையிலைப் பொருட்கள் 12 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொரு பாக்கெட்டிலும் 15 சிறிய பாக்கெட்டுகள் இருந்தன. அந்த வகையில், இவரிடமிருந்து மொத்தம் 180 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த புகையிலைப் பொருட்கள் COTPA ACT 2003 சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டவை. இந்த அதிரடி நடவடிக்கையை திறம்பட மேற்கொண்ட ரயில்வே காவலர்களுக்கு, டிஜிபி திரு.வன்னிய பெருமாள் ரயில்வே ஐஜி திரு.ஏ.ஜி.பாபு திருச்சி ரயில்வே எஸ்பி திரு.ராஜன்மற்றும் திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன் ஆகியோர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

இந்த சோதனையில் ஈடுபட்ட திருநெல்வேலி ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், உதவி ஆய்வாளர்கள் இராமகிருஷ்ணன், மாரிமுத்து, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் .முத்தமிழ் செல்வன் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோரின் துரித நடவடிக்கையும் பாராட்டத்தக்கது. கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.