சங்கரன்கோவில் : ஒரே உணவகத்துக்கு இரு முறை திறப்பு விழா

Sankarankovil-Two-opening-ceremonies-for-the-same-restaurant

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை மே 9ம் தேதி அரசு அதிகாரிகள் திறந்து வைத்தனர். அதே வேளையில், அந்த சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. எது எப்படியோ ஒரே கடையை இரண்டு முறை ரிப்பன் வெட்டி திறந்தாலும் ஏழை மக்களுக்கு சிறுதானியங்கள் தரமாக கிடைத்தால் போதும் என்று மக்கள் பேசி கொள்கின்றனர்.